Published : 02 Jan 2015 11:41 AM
Last Updated : 02 Jan 2015 11:41 AM

அறிவுசார் சொத்துரிமை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அறிவுசார் சொத்துரிமைக்கான சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மையமும், இந்திய தொழில் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு தொழில் மேம்பாடு மற்றும் வளர்ச்சி மையமும் இணைந்து தென்னிந்தியாவில் முதன்முறையாக பகுதி நேர அறிவுசார் சொத்துரிமைக்கான சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது.

இப்படிப்பின் நோக்கம், அறிவுசார் சொத்துரிமை சட்டம் தெரிந்த கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதே. இப்படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜன.19ம் தேதியாகும்.

இப்படிப்பை பற்றி மேலும் அறிய, இயக்குனர், அறிவுசார் சொத்துரிமை மையம், அண்ணா பல்கலைக்கழகத்தை அணுகலாம்.

மேலும், 044-22352576 என்ற தொலைபேசி எண்ணிலும், ciprtm@annauniv.edu என்ற மின்னஞ்சல் மற்றும் www.annauniv.edu/ipr என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x