Published : 19 Jan 2015 12:18 PM
Last Updated : 19 Jan 2015 12:18 PM

அ.தி.மு.க அரசு மீது விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநரிடம் வலியுறுத்தல்: ராமதாஸ்

அ.தி.மு.க அரசு மீது விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநரை வலியுறுத்த உள்ளோம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராமதாஸ், "பா.ம.கவில் உள்ள மூத்த தலைவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து அ.தி.மு.க மீது விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்த உள்ளனர்.

அரசின் சீர்கேடு, அ.தி.மு.க ஆட்சியின் ஊழல் குறித்து விரைவில் புத்தகம் வெளியிடப்படும்.

பெருந்துறை சிப்காட்டில் தனியார் குளிர்பாண நிறுவனத்துக்கு அனுமதி தந்ததில் முறைகேடு தொடர்பாக அமைச்சரிடம் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது '' என ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x