Last Updated : 07 Jan, 2015 12:23 PM

 

Published : 07 Jan 2015 12:23 PM
Last Updated : 07 Jan 2015 12:23 PM

பாகிஸ்தான் - டெல்லி பேருந்து சேவையில் மாற்றம்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதைத் தொடர்ந்து, லாகூர் - டெல்லி இடையேயான பேருந்து போக்குவரத்து சேவை வாகா எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தினசரி அளவில் லாகூரில் இருந்து டெல்லி வரை இயக்கப்படும் இருநாட்டு தோழமை அடிப்படையிலான போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் லாகூரிலிருந்து டெல்லி வரை இயக்கப்படும் பேருந்து சேவைகள் வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அங்கிருந்து வேறு வழியாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இந்த புதிய முறையிலான போக்குவரத்து தீவிரவாத அச்சுறுத்தலினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x