Published : 12 Jan 2015 09:33 AM
Last Updated : 12 Jan 2015 09:33 AM

தமிழகத்தை பாஜக கோட்டையாக மாற்றுவோம்: குமரியில் தமிழிசை சவுந்தரராஜன் சூளுரை

தமிழகத்தை பாஜக கோட்டையாக மாற்றுவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருக்குறள் திருப்பயணம் தொடக்க விழாவில் பங்கேற்க நேற்று கன்னியாகுமரி வந்திருந்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர் களுக்கு அளித்த பேட்டி: தருண் விஜய் எம்.பி., நடத்தி வரும் திருக் குறள் திருப்பயணம் அரசியல் சார்பற்றது.

மத்தியில் ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்தையும் பாஜக தனது கோட்டையாக மாற்றும். தமிழகத்தில் பாஜக காலூன்றி விடுமோ என்று அனைவரும் அச்சப்படுகின்றனர். காலூன்றுவது மட்டுமல்ல நாங்கள் வேரூன்றியும் விடுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம். தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. தற்போது முதல் கட்டமாக 8 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் கழகங்கள் இல்லாத ஆட்சியை பாஜக உரு வாக்கும். இலங்கை பிரச்சினையை வைகோ போன்றவர்கள் அரசியல் செய்ய பயன்படுத்துகின்றனர். அது இனிமேல் எடுபடாது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கவேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு தமிழசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x