தமிழகம் முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று நடக்கிறது
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை பல்லாவரம் அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று செலுத்தினர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை பல்லாவரம் அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று செலுத்தினர்.

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் ஒரு பகு​தி​யாக வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினருக்கு பயிற்சி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​களுக்கு மாநிலம் தழு​விய 2-ம் கட்ட தேர்​தல் பயிற்சி நேற்று நடத்​தப்​பட்​டது.

இதில் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​களின் கடமை​கள், பணி​கள், பொறுப்​பு​கள் தொடர்​பான தலைப்​பு​களி​லும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை கையாள்​வது குறித்த நேரடிப் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட்​டது. மேலும், வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் தங்​களின் வாக்​கு​களை தபால் வாக்​குச்​சீட்டு மூலம் பதிவு செய்​வதற்​கான வசதி​யும் ஏற்​படுத்​தித் தரப்​பட்​டது.

சுமார் 3 லட்​சம் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் ‘படிவம் 12’ வாயி​லாக தபால் மூலம் வாக்​களிக்க விண்​ணப்​பித்​துள்​ளனர்.

இப்​ப​யிற்சி மையங்​களி​லேயே அவர்​கள் தங்​களது தபால் வாக்​குச்​சீட்​டு​களைப்பெற்​று, அங்​கேயே வாக்​கு​களைப் பதிவு செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி தமிழகம் முழு​வதும் நேற்று சுமார் 3 லட்​சம் பேர் தங்​கள் தபால் வாக்​கு​களை செலுத்​தினர்.

முந்​தைய நடை​முறைப்​படி, தேர்​தல் பணி​யாளர்​கள் தபால் வாக்​குச்​சீட்டை தங்​கள் வீட்​டுக்கு எடுத்​துச் சென்​று, பின்​னர் தபால் மூலம் அனுப்பி வைப்​பது வழக்​க​மாக இருந்​தது.

தற்​போது அதற்​கென அமைக்​கப்​பட்ட வாக்​களிப்பு மையங்​களி​லேயே தங்​கள் வாக்​கு​களைப் பதிவு செய்​யும் வகை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

புரோ மாடியூல் பரிசோதனை

தேர்​தல் நாளன்​று, 2 மணி நேரத்​துக்கு ஒரு​முறை வாக்​குப்​ப​திவு சதவீத விவரங்​களை புதுப்​பிக்க, வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​களுக்கு உதவும் வகை​யில், இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது ‘இசிஐநெட்’ செயலித் தொகுப்​பில் புரோ மாடியூல் (PRO Module) என்ற தொகுதி ஒன்றை உரு​வாக்​கி​யுள்​ளது.

இது நேற்று பரிசோதனை செய்து பார்க்​கப்​பட்​டது. தமிழகத்​தில் 85 வயதுக்கு மேற்​பட்ட 4 லட்​சம் வாக்​காளர்​கள், 4.63 லட்​சம் மாற்​றுத் திற​னாளி​கள் உள்​ளனர். இவர்​களில் 1.20 லட்​சம் முதி​யோர், 70 ஆயிரம் மாற்​றுத் திற​னாளி​கள் என மொத்​தம் 1.90 லட்​சம் பேர் ‘12-டி’ படிவம் பெற்​று, தபால் வாக்கு செலுத்த விருப்​பம் தெரி​வித்​திருந்​தனர்.

இவர்​களும் கடந்த சில நாட்​களாக தங்​கள் வீட்​டில் இருந்​த​வாறே தபால் வாக்​கு​களை செலுத்தி வரு​கின்​றனர். தேர்​தலில் தலா 75,164 கட்​டுப்பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

வாக்​குப்​ப​திவுக்கு 1 லட்​சத்​துக்கு மேற்​பட்ட இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன. ஓர் இயந்​திரத்​தில் 16 வேட்​பாளர்​களின் பெயர்​கள் இடம்​பெறும். இத்​தேர்​தலில் தமிழகம் முழு​வதும் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

இவர்​களது பெயர்​கள், சின்​னங்​களை வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பொருத்​தும் பணி, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில், அந்​தந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தலை​மை​யில் இன்று நடை​பெறுகிறது.

<div class="paragraphs"><p>தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை பல்லாவரம் அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று செலுத்தினர்.</p></div>
மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை வெட்டிய கஞ்சா போதை இளைஞர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in