Published : 01 Jan 2015 11:41 AM
Last Updated : 01 Jan 2015 11:41 AM

கடந்த ஆண்டின் நிகழ்வுகள் : தருணங்கள் 2014

கடந்த ஆண்டின் நிகழ்வுகளைப் பற்றிய தலையங்கம் வார்த்தைகளால் விவரித்தது என்றால், ‘தருணங்கள் 2014’ தொகுப்பு புகைப்படங்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆவணக் காப்பகத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒவ்வொரு புகைப்படமும் ஒரு பக்கக் கட்டுரைக்குச் சமம் என்பதில் சந்தேகமில்லை.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,

வேம்பார்.

காட்சியாகக் கடந்த ஆண்டு மகிழ்ச்சியான தருணங்களையும் துயரமான தருணங்களையும் வார்த்தைகள் மூலம் எவ்வளவு எழுதினாலும், புகைப்படங்கள் தரும் அனுபவம் என்பது முற்றிலும் வேறு.

‘கருத்துப் பேழை’ பகுதியில் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்ட 2014-ம் ஆண்டின் முக்கிய தருணங்கள் நிறைவாக இருந்தன. இந்தப் புகைப்படங்கள் சொல்லும் கதைகள் வார்த்தைகளைத் தாண்டிய வலுகொண்டவை. கடந்துசென்ற ஆண்டை புகைப்படங்களின் மூலம் கண்முன்னே நிறுத்திய ‘தி இந்து’வுக்கு நன்றி.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x