Published : 22 Jan 2015 03:32 PM
Last Updated : 22 Jan 2015 03:32 PM

ஒகேனக்கல் பஸ் விபத்து: பலி 10 ஆக அதிகரிப்பு

ஒகேனக்கல் பஸ் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் ஒருவர் இன்று பலியானார். இதனையடுத்து பலி 10 ஆக அதிகரித்துள்ளது.

பலத்த காயங்களுக்காக இன்னும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 20-ம் தேதியன்று, ஒகேனக்கல் மலைப் பாதையில் 300 அடி ஆழ பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து உருண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x