Published : 22 Jan 2015 03:32 PM
Last Updated : 22 Jan 2015 03:32 PM
ஒகேனக்கல் பஸ் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது பெண் ஒருவர் இன்று பலியானார். இதனையடுத்து பலி 10 ஆக அதிகரித்துள்ளது.
பலத்த காயங்களுக்காக இன்னும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 20-ம் தேதியன்று, ஒகேனக்கல் மலைப் பாதையில் 300 அடி ஆழ பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து உருண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT