Published : 07 Jan 2015 09:54 AM
Last Updated : 07 Jan 2015 09:54 AM
தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஐஐடியில் பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் குளிர் கால பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
ஜனவரி 14 முதல் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமுக்கு ஐஐடியின் ஆராய்ச்சி அமைப்பான சமூக ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோர் மையம் ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் காணப்படும் சமூக ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவின் பங்களிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். வகுப்புகள் தமிழி லும் ஆங்கிலத்திலும் நடை பெறும்.
இதில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் கலந்துகொள்ள லாம். விருப்பமுடைய மாணவர் கள் www.csie.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஜனவரி 12-ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ.200-ஐ பயிற்சியின் முதல் நாளன்று நேரில் செலுத்திக்கொள்ளலாம் என்று ஐஐடி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT