Published : 31 Jan 2015 09:53 AM
Last Updated : 31 Jan 2015 09:53 AM

பயிற்சி முடித்த 23 டிஎஸ்பிகளுக்கு பணி ஒதுக்கீடு

தமிழகத்தில் பயிற்சி முடித்த 23 டிஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கியும், 21 டிஎஸ்பிகளை பணியிட மாறுதல் செய்தும் டிஜிபி அசோக்குமார் உத்தரவிட் டுள்ளார்.

இந்த உத்தரவின்படி சேலம் மாவட்டம் (மேற்கு) சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக பி.வி.விஜயகார்த்திக் ராஜ், விருது நகர் மாவட்டம் (சாத்தூர்) டிஎஸ்பி யாக பி.குமார், கரூர் மாவட்டம் (புறநகர்) டிஎஸ்பியாக வி.வி.கீதாஞ்சலி என தமிழகம் முழுவதும் 23 டிஎஸ்பிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

21 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

21 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டம் (திருக்கோவிலூர்) டிஎஸ்பி என்.எஸ்.ராஜேந்திரன் சென்னை பொருளாதார குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாகவும், கடலூர் மாவட்டம் (விருத்தாசலம்) டிஎஸ்பி வெங்கடேசன் சேலம் நகர குற்ற ஆவணக் காப்பகம் உதவி கமிஷனராகவும், கடலூர் மாவட் டம் (சேத்தியாத்தோப்பு) டிஎஸ்பி என்.சுரேஷ்பாபு கரூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும், திருவண்ணா மலை மாவட்டம் (புறநகர்) டிஎஸ்பி எஸ்.பாலகிருஷ்ணன் நாகப் பட்டினம் மாவட்ட குற்ற ஆவ ணக் காப்பகம் டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x