

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மீனவர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ராமர் (40), தலையில் பலத்த காயமடைந்ததாக கியூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.