Published : 05 Jan 2015 10:10 AM
Last Updated : 05 Jan 2015 10:10 AM

சென்னை: பாட்டி, பேத்தியை கொன்று நகைகள் கொள்ளை

சென்னை பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி(83). கணவர் நட்ராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜலட்சுமியின் மகன் வழி பேத்தி அன்னபூரணி(33). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்தார். தனியார் கார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். ராஜலட்சுமியும், அன்னபூரணியும் பள்ளிக்கரணை வீட்டில் வசித்தனர்.

கடந்த 1-ம் தேதி அன்று இருவரை யும் வீட்டருகே உள்ளவர்கள் பார்த்துள்ளனர். அதன் பின்னர் யாரும் இவர்களை பார்க்கவில்லை. இந்நிலையில் ராஜலட்சுமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் நேற்று காலையில் அங்கு சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ராஜலட்சுமியும், அன்னபூரணியும் தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். இருவரின் தலையில் இருந்தும் ரத்தம் வெளிவந்து அறை முழுவதும் பரவி கிடந்தது. உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

விசாரணையில் 25 சவரனுக்கும் அதிகமான நகைகள், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. வீட்டில் இரண்டு பெண்கள் மட்டுமே இருப்பதை நன்றாக அறிந்து வீட்டின் பின்பக்க வாசல் வழியாக நுழைந்து கொலை, கொள்ளையை செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x