Published : 01 Jan 2015 10:11 AM
Last Updated : 01 Jan 2015 10:11 AM

துபாய், தாய்லாந்துக்கு சுற்றுலா: ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகம்

ஐஆர்சிடிசி நிறுவனம் துபாய், தாய்லாந்து நாட்டுக்கு விமானம் மூலம் சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாய் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விமானம் மூலம் பயணிகள் சுற்றுலாவை அறி முகப்படுத்தியுள்ளது. இதன்படி, துபாய் சுற்றுலா வரும் 23-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 26-ம் தேதி மீண்டும் சென்னையில் வந்து நிறைவடை கிறது. 4 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒரு வருக்கு ரூ.45,250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தாய்லாந்து நாட் டுக்கான சுற்றுலா பிப்.13-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடையும். 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூ.33,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவில் விமான பயணச்சீட்டு, 3 நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க குளிர்சாதன வாகனம், உணவு, பயணக் காப்பீடு, சுற்றுலா தகவலர் ஆகியவை அடங்கும்.

முன்பதிவு செய்ய

மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்ய சென்னையில் 9840902917/9840902919, காட்பாடியில் 9840948484, மதுரை யில் 9003140714/9840902915, கோவையில் 9003140680 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங் களுக்கு www.irctctourism.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x