Published : 02 Jan 2015 01:05 PM
Last Updated : 02 Jan 2015 01:05 PM

சென்னையில் முதன்முறையாக வயலின் திருவிழா

சென்னையில் முதன்முறையாக ஜனவரி 4-ம் தேதியன்று வயலின் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீநிவாச சாஸ்திரி அரங்கில் வயலின் வைபவம் என்ற பெயரில் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

லால்குடி டிரஸ்ட், குருதங்கயா டிரஸ்ட் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்ச்சியை வயலின் இசைக் கலைஞர் ஏ.கன்னியாகுமரி தொடங்கி வைக்கிறார்.

பள்ளிக் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x