Published : 01 Jan 2015 10:10 AM
Last Updated : 01 Jan 2015 10:10 AM

வட கிழக்கு பருவ மழை முடிந்தது

வட கிழக்கு பருவ மழையின் முடிவில் தமிழகத்தில் சராசரியாக 43 செ.மீ. மழை பெய்துள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 31-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது சராசரியாக 44 செ.மீ .மழை பெய்யும். இந்த ஆண்டு சராசரியாக 43 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சராசரி அளவுக்கு அதிகமாக பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இயல்பான மழை அளவு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில்101.6 செ.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 28.94 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x