Published : 19 Jan 2015 10:59 AM
Last Updated : 19 Jan 2015 10:59 AM

நாளை முதல் அமராவதி அணை திறக்க முதல்வர் உத்தரவு

பாசனத்துக்காக திருப்பூர் அமராவதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதலல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் '' திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 20.1.2015 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் '' என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x