Published : 28 Jan 2015 11:51 AM
Last Updated : 28 Jan 2015 11:51 AM

சென்னையில் மதுவிலக்கு வலியுறுத்தி ஜன. 30-ல் உண்ணாவிரதம்

சென்னை மாநகரில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநகராட்சிக் கட்டிட நுழைவாயி லில் ஜனவரி 30-ம் தேதி உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என்று காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலை வரும் காந்தி பேரவைத் தலைவரு மான குமரி அனந்தன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மதுப் பழக்கத்தால் பல குடும்பங் கள் சீரழிகின்றன. உயிரிழப்பு அதிகமாகிறது. எனவே, சேலத்தில் மது விற்கக் கூடாது என்று ராஜாஜி 1917-ல் கூறியதுபோல, சென்னை மாநகராட்சியும் தனது எல்லைக்குள் மது விற்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சிக்கு பலமுறை மனு அளித்தும் பதில் கிடைக்கவில்லை. எனவே, மது விற்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற் றாததைச் சுட்டிக்காட்டியும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் மத்திய சென்னை, வட சென்னை காங்கிரஸ் அமைப்புகள், காந்தி பேரவை, விடுதலைப் போர்த் தியாகிகள் வாரிசு சங்கம் இணைந்து ஜனவரி 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரிப்பன் கட்டிடத்தின் நுழைவாயிலில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம்.

இவ்வாறு குமரி அனந்தன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x