Published : 21 Jan 2015 10:36 AM
Last Updated : 21 Jan 2015 10:36 AM

ஜெ.வுடன் சந்திப்பு ஜேட்லி விளக்கம் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் ஜேட்லி சந்தித்தார். இது பல சந்தேகங்களை எழுப்புவ தாகவும், அதுகுறித்து ஜேட்லி விளக்கமளிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்தக் கட்சி யின் மாநிலச் செயலர் ஜி. ராம கிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஜாமீனில் வந்துள்ளார். இச்சூழலில் அவரை, மத்திய நிதியமைச்சர் ஜேட்லி சந்தித்திருப்பது சட்டமும், நீதிமுறைகளும் வளைக்கப் படுமோ என்ற கேள்வியை எழுப்பு கிறது. எனவே, அவருடனான சந்திப்பு குறித்து அருண் ஜேட்லி விளக்க மளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x