Published : 18 Jan 2015 12:14 PM
Last Updated : 18 Jan 2015 12:14 PM

ஸ்ரீரங்கம் பிரச்சாரம்: தலைவர்கள், பேச்சாளர்கள் பட்டியலை ஜன. 27-க்குள் அளிக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வுள்ள கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள் பட்டியலை 27-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தங்களது வேட்பாளருக்காக பிரச்சாரத்துக்கு செல்லும்போது அதற்கான போக்குவரத்து செலவு, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேராது.

இதற்காக, தேர்தல் அறிவிக்கை தொடங்கி 7 நாட்களுக்குள் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்யும் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் 40 நட்சத்திரப் பேச்சாளர்களையும், அங்கீகாரம் பெறாத கட்சிகள் 20 பேரையும் பட்டியலிட்டு, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை, வரும் 19-ம் தேதி வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, தங்களது வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யவுள்ள கட்சித் தலை வர்களின் பெயர் பட்டியலை 27-ம் தேதிக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பட்டியலில் உள்ள தலைவர்கள், பேச்சாளர்களைத் தவிர மற்றவர்களின் செலவுகள், வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x