Published : 04 Jan 2015 12:08 PM
Last Updated : 04 Jan 2015 12:08 PM

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர விசாரணை

சென்னை கதீட்ரல் மற்றும் எல்டாம்ஸ் சாலைகளில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக் கப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர், ‘நான் உளவுத்துறை அதிகாரி. கதீட்ரல் மற்றும் எல்டாம்ஸ் சாலைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை வெடிப்பதற்கு முன்பு பொது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கதீட்ரல், எல்டாம்ஸ் சாலைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நுங்கம்பாக்கத்தில் இருந்து பேசியதைக் கண்டுபிடித்த போலீஸார், இதுதொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x