Published : 25 Jan 2015 10:13 AM
Last Updated : 25 Jan 2015 10:13 AM

தங்கர் பச்சான் தாயார் காலமானார்

திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானின் தாயார் லட்சுமி அம்மாள் (91) நேற்று மாலை காலமானார்.

கடலூர் மாவட் டம், பண்ருட்டி அருகில் உள்ள பத்திரக் கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். வயது மூப்பின் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று மாலை காலமானார். அவருக்கு செல்வராசு, கோவிந்தராசு, தேவராசு, தங்கர் பச்சான், வரதராசு ஆகிய 5 மகன்களும், சாயாவர்ணம், மனோரஞ்சிதம் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். லட்சுமி அம்மாளின் இறுதி சடங்குகள் இன்று மாலை பத்திரக்கோட்டை கிராமத்தில் நடக்கிறது.

தனது தாயாரின் இழப்பு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கூறும்போது, “என் கலை ஆர்வத்துக்கு தெருக்கூத்து கலைஞரான என்னுடைய அப்பா பச்சான் காரணமாக இருந்தாலும், அம்மா லட்சுமி அம்மாளின் ஊக்குவிப்பும், அரவணைப்பும்தான் என்னை உலகறியச் செய்தது. அவரது இழப்பை பேரிழப்பாக கருதுகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x