Published : 23 Jan 2015 09:49 AM
Last Updated : 23 Jan 2015 09:49 AM

நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு மேலும் 3 மாதம் கால நீட்டிப்பு

புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பான புகார் குறித்து விசாரிக்கும் நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு மேலும் 3 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி செலவில் புதிய தலைமை செயலகக் கட்டிடம் கட்டப்பட்டு 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. பின், 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது.

புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ரகுபதி கமிஷனின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 22-ம் தேதி முடிந்ததையொட்டி, 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. நேற்றுடன் (22-ம் தேதி) கமிஷனின் விசாரணைக் காலம் முடிந்ததால், மீண்டும் 3 மாதங்களுக்கு கமிஷனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுத்துறை முதன்மைச் செயலர் ஜதீந்திர நாத் ஸ்வைன் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x