Published : 17 Jan 2015 12:00 PM
Last Updated : 17 Jan 2015 12:00 PM

சென்னையில் ராணுவ தினம் கொண்டாட்டம்

ராணுவ தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் ராணுவ தளபதியாக முதன்முதலில் ஜெனரல் கரியப்பா 1948, ஜனவரி 15-ம் தேதி பதவியேற்றார். இதைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தென்மண்டல ராணுவ அதிகாரி ஆர்.ஜி.கிருஷ்ணன் நேற்றுமுன்தினம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ராணுவத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து பதக்கம் வென்ற 30 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x