Published : 19 Jan 2015 10:14 AM
Last Updated : 19 Jan 2015 10:14 AM
பொங்கல் பண்டிகைக்கான 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு, மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மின் வாரியத்தின் மின் கட்டண வசூல் மையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி, 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தக் காலக்கெடு உள்ளவர்கள், 19 மற்றும் 20-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி, இன்றும், நாளையும், மின் நுகர்வோர்கள் கூடுதல் கட்டணம், அபராதமின்றி பணம் செலுத்தலாம்.
மின் கட்டண மையங்களில் விடுமுறை நாட்களில் காலக்கெடு உள்ளோருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT