Published : 28 Jan 2015 08:17 PM
Last Updated : 28 Jan 2015 08:17 PM
ஊழலிலும் கடனிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
''தமிழகம் ரூ. ஒரு லட்சத்து 78ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது. ஊழலிலும் கடனிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது .
இதை மாற்றி அமைக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்கவேண்டும். சேவை பெறும் உரிமைச்சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படவேண்டும்.
குடியரசு தின விழா ஊர்திகளில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றது கண்டிக்கத்தக்கது.'' என்று ராமதாஸ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT