Published : 12 Jan 2015 03:37 PM
Last Updated : 12 Jan 2015 03:37 PM

நில அபகரிப்பு வழக்கில் 4 பேர் கைது

காஞ்சிபுரத்தை அடுத்த ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தில் 80 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், ஏழுமலை, செல்வம், மாரி, செந்தில்குமார் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தாண்டவராயனுக்கு 2009-ல் கிரயம் செய்துள்ளனர்.

இந்த மோசடிக்கு தாண்டவராயனும் உடந்தையாக இருந்தாராம். பின்னர், அந்த நிலத்தின் பொது அதிகாரத்தை பொடவூர் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாகரனுக்கு தாண்டவராயன் வழங்கியுள்ளார். அவர் அந்த நிலத்தை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியிடம் அடமானம் வைத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாண்டவராயன், சந்திரன், ஏழுமலை, மாரி ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x