Published : 29 Jan 2015 09:59 AM
Last Updated : 29 Jan 2015 09:59 AM

‘மெல்லத் தமிழன் இனி...’ புத்தகம் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

கும்பகோணத்தில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் திருவெம்பாவை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘தி இந்து’ வெளியீடான ‘மெல்லத் தமிழன் இனி…’ புத்தகம் பரிசளிக்கப் பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் சார்பில் நேற்று முன்தினம் கும்பகோணம் ஆதிகும் பேஸ்வரர் கீழவீதியில் ஆன்மிக விழா நடைபெற்றது. சிவனடி யார்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், கோயில்கள் மற்றும் கோசாலைகளில் பணியாற்று வோர் பாராட்டப்பட்டனர்.

முன்னதாக நடத்தப்பட்ட திரு முறைகள் பாடல்கள் போட்டி யில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றி தழ்களும், திருமறை, திருப் புகழ் புத்தகங்களுடன் ‘தி இந்து’ வெளியீடான ‘மெல்லத் தமிழன் இனி…’ புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. 35 மாணவர் களுக்கு அவர்களின் பெற்றோர்களின் கையால் இந்த புத்தகப் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் நிறைவுறையாற்றினார். பள்ளி மாணவர்களுடன் திருவடிக்குடில் சுவாமிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x