Published : 28 Jan 2015 11:55 AM
Last Updated : 28 Jan 2015 11:55 AM

ஸ்டான்லியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்டிக் மற்றும் கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை சார்பில் “பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துறைத் தலைவர் மருத்துவர் கே.பூபதி, மருத்துவர்கள் நெல்லையப்பர், ராஜ்குமார், ஜெயகுமார், சுகுமார் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு, மருத்துவர்கள் பதில் அளித்தனர்.

இதுதொடர்பாக பிளாஸ்டிக் மற்றும் கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் கே.பூபதி கூறியதாவது:

ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனையில் 1971-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. முகச்சுருக்கம் நீக்குதல், விபத்தில் காயம் அடைந்த வருக்கு உறுப்புகள் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், உடலில் தீக்காயங்களால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்தல், புற்று நோயால் அகற்றப்படும் சதைகளை மீண்டும் இணைத்தல் போன்றவை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x