Published : 27 Jan 2015 10:03 AM
Last Updated : 27 Jan 2015 10:03 AM

திருவள்ளூரில் மணல் கடத்தலைத் தடுத்த ஆர்டிஓ-வை தாக்க முயற்சி

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே நேற்று மணல் கடத்தலைத் தடுத்த கோட்டாட்சியரைத் தாக்க முயன்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

சோழவரம் அருகேயுள்ள ஆத் தூர் கிராமம் வழியாகச் செல் லும் கொசஸ்தலை ஆற்றில், சிலர் அனுமதியின்றி மணல் அள்ளுவ தாக கிடைத்த தகவலின் பேரில், பொன்னேரி கோட்டாட்சியர் மேனு வல்ராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் அருள்வளவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் விரைந்து சென்றனர்.

வருவாய்த் துறையினரைக் கண்டதும், அந்தப் பகுதியில் லாரி, டிராக்டர் ஆகியவற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர், பாபு, ரஜினி ஆகியோரைத் தவிர ஏனையோர் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து, லாரி, டிராக்டர் ஆகியவற்றை கோட்டாட்சியர் மேனுவல்ராஜ் பறிமுதல் செய்ய முயன்றார். சங்கர், பாபு, ரஜினி ஆகியோர் பறிமுதல் நடவடிக்கை யைத் தடுத்து, கோட்டாட்சியரையும் தாக்க முயன்றனராம்.

பின்னர், லாரி, டிராக்டர் ஆகி யவை சோழவரம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டதன. இதுதொடர் பாக சோழவரம் போலீஸார் விசா ரணை நடத்தி, கோட்டாட்சியரைத் தாக்க முயன்றதாக சங்கரைக் கைது செய்தனர். தலைமறைவான பாபு, ரஜினி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x