Published : 22 Jan 2015 11:49 AM
Last Updated : 22 Jan 2015 11:49 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி: ஜி.ராமகிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க.அண்ணாதுரை போட்டியிடுவார் எனவும் அவர் அறிவித்தார். க.அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, திமுக வேட்பாளர்கள் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டனர். மதிமுக, பாமக தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. பாஜக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x