Published : 24 Jan 2015 10:10 AM
Last Updated : 24 Jan 2015 10:10 AM
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் கடந்த டிசம்பரில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது, தூக்கத்தில் தவறுதலாக 2 தங்க பற்களை விழுங்கிவிட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்து வர்கள் பரிசோதனை செய்து, 2 தங்கப் பற்கள் உணவுக் குழாயில் அடைத் திருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்தனர்.
இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத் துவர் சந்திரமோகன் தலைமையி லான குழுவினர், முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து உணவுக் குழாயில் சிக்கியிருந்த தங்க பல்செட்டை அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைவர் விமலா, மருத்துவர் சந்திரமோகன் கூறியதாவது:
எண்டோஸ்கோபிக்கு பதிலாக அறுவை சிகிச்சை செய்தோம். இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.1 லட்சத்துக்கு மேல் செல வாகும்.
பெரும்பாலான முதியவர்கள் தூங்கும்போது பொய்ப் பற்களை (பல்செட்) தவறுதலாக விழுங்கிவிடுகின்றனர். விழுங்கியதே தெரியாமல் புதிதாக பல்செட் வைத்துக்கொள்கின்றனர். பல்செட்டில் உள்ள இரும்பு ஊக்கு, உணவுக் குழாய்க்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. எனவே, முதியவர்கள் கவனமாக பல்செட்டை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT