Published : 10 Jan 2015 11:07 AM
Last Updated : 10 Jan 2015 11:07 AM

ஜன.18, பிப்.22-ல் போலியோ சொட்டு முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 70.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் கள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் சுமார் 45 ஆயிரம் மையங்களில் ஜனவரி 18-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் இந்த முகாம் நடைபெறும். 2-வது தவணை முகாம் பிப்ரவரி 22-ம் தேதி நடக்கிறது.

அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த முகாமில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் அருகில் உள்ள முகாமுக்கு சென்று கட்டாயமாக சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று சுகாதரத் துறை கோரியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x