Published : 23 Jan 2015 10:03 AM
Last Updated : 23 Jan 2015 10:03 AM
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகேயுள்ள வங்க னூரில், கடந்த 1-ம் தேதி அம்பேத்கர் சிலையை யாரோ அவமதிப்பு செய்திருந்தனர்.
இந்த நிலையில், திருத்தணி அருகேயுள்ள காசிநாதபுரம் கூட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையை யாரோ அவமதிப்பு செய்திருந்தது நேற்று காலை தெரிய வந்தது. இதையறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் உடனடியாக அம்பேத்கர் சிலையை சுத்தப் படுத்தி, பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், 100-க்கும் அதிகமா னோர் திரண்டு, திருத்தணி காவல் நிலையம் முன் கூடி அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி னர். உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக போலீஸார் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென் றனர்.
இருப்பினும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக காசி நாதபுரம் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT