Published : 20 Jan 2015 09:18 AM
Last Updated : 20 Jan 2015 09:18 AM

விபத்தில் இளைஞருக்கு மூளைச் சாவு: வேலூரில் இருந்து சென்னைக்கு இதயம், சிறுநீரகம், கல்லீரல் பயணம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப் பட்டன. உடல் உறுப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் கணியம் பாடி அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (23). பிளஸ் 2 முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். கடந்த 13-ம் தேதி கண்ணமங்கலம் பஜார் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத் தில் வேகமாக வந்த ஒருவர், அருண் மீது மோதியுள்ளார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அருணின் காதில் இருந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அருணுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாக நேற்று காலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அருணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தை கன்னியப்பன் சம்மதம் தெரிவித் தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் நேற்று மாலை அகற் றப்பட்டன. இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியன சென்னையில் உள்ள 2 தனியார் மருத்துவ மனைகளுக்கும், கண்கள் சிஎம்சி கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

சென்னைக்கு வழங்கப்பட்ட உடல் உறுப்புகளை பாதுகாப் புடன் கொண்டுசெல்ல போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட் டது. மாலை 5.40 மணியளவில் ஆம்புலன்ஸில் அருணின் உடல் உறுப்புகளை மருத்துவர்கள் குழுவினர் எடுத்துச் சென்றனர். போக்குவரத்தில் இடையூறு இல்லாமல் இருக்க போலீஸ் வாகனம் பாதுகாப்புடன் சென் றது. இரவு 7.15 மணி அளவில் சென்னையை அடைந்தது. முன்ன தாக ஆற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் ரோந்துப் பிரிவு போலீஸார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x