Published : 14 Jan 2015 03:07 PM
Last Updated : 14 Jan 2015 03:07 PM

பொங்கல் திருநாள்: திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பொங்கல் திருநாள் இன்று - தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளும் இன்று தான்!

இந்த நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் - மா, பலா, வாழை என்று முக்கனித் தருக்களை நாட்டி - வண்ண வண்ணக் கோலங்களிட்டு - வரிசை வரிசையாய் விளக்குகளால் ஒளியுமிழ் அலங்காரம் செய்து - வீடுகள் எல்லாம் எழில் காட்டிட - புத்தாடை புனைந்து - தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும் - சமத்துவ உணர்வு பரப்பியும் - தை முதல் நாளே, தமிழர் புத்தாண்டுத் திருநாள் என்று உரக்கக் கூவி, தமிழரெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திட வேண்டுமென்று என்னுடைய இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x