Published : 06 Jan 2015 09:59 AM
Last Updated : 06 Jan 2015 09:59 AM

அஞ்சல் துறை சதுரங்கப் போட்டி இன்று தொடக்கம்

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பில் அனைத் திந்திய அஞ்சலக சதுரங்க போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் 29-வது அனைத்திந்திய அஞ்சலக அஞ்சல் போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 06-01-2015-ல் (இன்று) தொடங்குகிறது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் ஏற்பாட்டின் பேரில் நடக்கும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம், அசாம், ஹரியானா, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, ஒடிஷா உள்ளிட்ட 14 அஞ்சல் வட்டத்தை சேர்ந்த இருநூற்றுக்கும் அதிகமான வர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டியை தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி டி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார். அர்ஜுனா விருது பெற்ற மேனுவல் ஆரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். 12-ம் தேதி வரை போட்டி நடக்கிறது. பரிசளிப்பு விழாவில் அனைத் திந்திய சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பின் செயலாளர் வி.ஹரிஹரன் சிறப்பு பங்கேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x