Published : 21 Jan 2015 10:37 AM
Last Updated : 21 Jan 2015 10:37 AM

வெற்றி நிரந்தரம்

சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ‘வாய்வழி விளம்பரம்’ செய்தியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் ஆழ யோசிக்க வேண்டிய நிரந்தர உத்தி உள்ளது.

வர்த்தகத்துக்கு விளம்பரங்கள் முக்கியமானது. வணிகத்தைத் தூக்கி நிறுத்துவோர் - மருத்துவம் முதலான சேவையைப் பலரிடமும் அமைதியாக ஆழமாக - நிரந்தரமாகக் கொண்டுசெல்வோர் genuine customer என்ற மாறா இயல்பைக் கொண்ட வாடிக்கையாளரே!

ஆளுமை மிக்க - ஈர்ப்பு மிக்க அவர்களில் சிலர் இன்னும் பலரை அந்த வர்த்தக வளையத்துக்குள் கொண்டுவந்து விடுவர் என்பதும் உண்மை.

வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடம் பொருளின் உண்மைத் தன்மையும் வியாபாரத்துக்குப் பிந்தைய சேவையும், மாற்றிக்கொடுக்கும் இயல்பும், வாடிக்கையாளர் சொல்வதை ஏற்கும் பக்குவமும் வியாபாரத்தைப் பரவலாக்கும்; வெற்றியை நிரந்தரமாக்கும்.

- பி. ஸ்தனிஸ்லாஸ்,வேளாங்கண்ணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x