Published : 13 Jan 2015 11:40 AM
Last Updated : 13 Jan 2015 11:40 AM

ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிட போவதாக கள் இயக்கம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தமிழ் நாடு கள் இயக்கம் போட்டியிடும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.

அவர் நேற்று கரூரில் செய்தியாளர்களிடம் கூறியது: கேரள மாநிலத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். எத்தனாலை முழு அளவில் உற்பத்தி செய்து, வாகன எரிபொரு ளாகப் பயன்படுத்த வேண்டும். வேளாண்மைக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கள் இயக்க வேட்பாளர் போட்டியிடு வார். வெற்றி, தோல்வி என்பது எங்கள் இலக்கு அல்ல.

எனினும், வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தியாக கள் இயக்கம் இருக்கும். நெல் அறுவடை மும்முரமாக நடந்து வரும் சூழலில், நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாகத் திறக்கப் படவில்லை. கரும்புக்கு உரிய விலையை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x