

சம்பத்குமார்
சென்னை: சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதற்கு அமைச்சர் சம்பத்குமார் பதில் அளித்தார். அதன் விவரம்:
அமைச்சர் சம்பத்குமார்: பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் 11 உறுப்பினர்கள் கொண்ட கொள்முதல் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் கடந்த 24-ம் தேதி நடத்தப்பட்டது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்படும். சமூகநீதி விடுதிகளில் சுகாதாரம், பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், விடுதிக் காப்பாளர்கள் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளைமாக்ஸை முன்பே சொல்லிவிட்டால், படம் எப்படி ஓடும் என்று கேட்டார்கள். இந்த படத்தின் ஹீரோ யார் என்று எல்லோருக்கும் தெரியும். எங்கள் படம் எப்படி ஓடும் என்று உலகத்துக்கே தெரியும்.
பாட்டு பாடிய அமைச்சர்: ஒரு பாடல் மட்டும் பாடிக் கொள்கிறேன். இது எதிர்க்கட்சித் தலைவருக்கு பிடிக்கும் என்று தெரியும். ‘‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று. அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று. தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு. ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு.’’ சிலர் ரீல்ஸ் பரப்புகின்றனர் என்று அப்போதே எம்ஜிஆர் பாடியுள்ளார். (திமுகவினர் எழுந்து அமளி.)
அமைச்சர் செங்கோட்டையன்: எம்ஜிஆர் பாடலைத்தான் அமைச்சர் பாடினார். அதில் உள் அர்த்தம் எதுவும் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் பதில் உரையை ஒரு நாள் தாமதமாக தற்போதுதான் ஆரம்பித்துள்ளார். இதில் பாட்டு வேறு பாடுகிறார். சாட்சிக்கு என்னையும் அழைக்கிறார். நாங்கள் இதற்கு பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.