Published : 20 Jan 2015 12:36 PM
Last Updated : 20 Jan 2015 12:36 PM

தாவூத் இப்ரஹிம் கூட்டாளி மும்பையில் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த, நிழல் உலக தாதாவான தாவூத் இப்ரஹமின் கூட்டாளி ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச போலீஸார் அவரை கைது செய்தனர்.

தீவிரவாத தடுப்பு குழுவும், உத்தரப்பிரதேச போலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், தாவூத் இப்ரஹமின் கூட்டாளியான தாரிக் பர்வீண் கைது செய்யப்பட்டார்.

மும்பை முன்னாள் மேயர் யாதவ் கொலை வழக்கில் தாரிக் தொடர்புடையவர். கொலைக்கான ஆயுதங்களை கூலிப்படைக்கு வழங்கியதாக தாரிக் மீது வழக்கு இருக்கிறது. இவரை போலீஸார் நீண்ட காலமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தாரிக் பர்வீண் மும்பையில் பதுங்கியிருப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x