Published : 01 Jan 2015 12:55 PM
Last Updated : 01 Jan 2015 12:55 PM

கேரளாவில் சாலை விபத்து: 6 மாணவர்கள் பலி

கேரளாவில் சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கேரள மாநில கொல்லம் மாவட்டத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வர்கலா கடற்கரைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியபோது இந்த சோகம் நடந்துள்ளது.

எதிரே வந்த லாரியுடன் மோதியதில் காரில் பயணித்த டி.கே.எம். கொல்லம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பலியாகினர். மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x