Published : 24 Jan 2015 01:19 PM
Last Updated : 24 Jan 2015 01:19 PM
சென்னையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திருநீர்மலை அருகே எதிர்பாராமல் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT