

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் 2013-14-ம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
இந்த எழுத்துத் தேர்வில் தற்காலிக மாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே பிரேசர் பாலச்சாலை, வ.உ.சி நகரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலமாக தனியாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் தற்போதைய காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதியை அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த கலந்தாய்வுக்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.