Published : 06 Jan 2015 10:14 AM
Last Updated : 06 Jan 2015 10:14 AM

மருதையாறு பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூர் மருதையாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர் ரயில் நிலையத்துக்கு, நேற்று வந்த ஒரு கடிதத்தில், “வரும் 13 முதல் 17-ம் தேதிக்குள் மருதை யாற்றுப் பாலத்தில் மலைக் கோட்டை ரயில் வரும்போது ‘டைம்பாம்’ வெடிக்கும். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் கள் ரயிலில் செல்லும்போதும் குண்டு வெடிக்கும்” என்று எழுதப் பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில், ‘மோகன் முரளி, சுரேஷ் வீடியோ போட்டோ கடை, ராமலிங்க நகர், புத்தூர், திருச்சி’ எனவும் குறிப்பிடப்பட் டுள்ளது.

மேலும், எழுதியவர் பெயர் மற்றும் முகவரியுடன் குண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், குறிப்பிட்ட நபருக்கு ஆகாத சிலரின் வேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

எனினும், ரயில்வே போலீஸா ருடன் அரியலூர் சட்டம் ஒழுங்கு போலீஸாரும் மருதையாற்று பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையிட்டு பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற் கொண்டுள் ளனர். இந்த மர்ம கடிதத்தால் அரி யலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x