Published : 29 Dec 2014 09:35 AM
Last Updated : 29 Dec 2014 09:35 AM

கோட்சேவுக்கு சிலை அமைக்கும் முயற்சி சரியானது அல்ல: இல.கணேசன் ஈரோட்டில் பேட்டி

நாடு முழுவதும் மக்களால் போற்றப்படுகிற தேசத்தின் அடையாளமாக மகாத்மா காந்தி விளங்குகிறார். அவரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை அமைக்கும் முயற்சி சரியானது அல்ல என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜனதா அணி அமையும்.

நாடு முழுவதும் மக்களால் போற்றப்படுகிற தேசத்தின் அடை யாளமாக மகாத்மா காந்தி விளங்குகிறார்.

அவரை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு சிலை அமைக்கும் முயற்சி சரியானது அல்ல. மனமாற்றம் மூலமே நடை பெறும் மதமாற்றத்தை பா.ஜனதா ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆசையை காட்டி, கட்டாய மதமாற்றம் செய்வது தண்டிக்கப்பட வேண்டும். இந்துக்களை மற்ற மதங்களுக்கு மாற்றுகிறார்கள். ஆனால் இது பற்றி எந்த அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கவில்லை.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியிலும் மீன்பிடித்து வந்தனர். அதுபோன்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அறிவிப்போம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x