Published : 09 Dec 2014 10:54 AM
Last Updated : 09 Dec 2014 10:54 AM

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக 10.12.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

இதனால், மதுரை மாவட்டத்தில் உள்ள 27,259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x