

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக 10.12.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.
இதனால், மதுரை மாவட்டத்தில் உள்ள 27,259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என கூறியுள்ளார்.