Published : 14 Dec 2014 10:43 AM
Last Updated : 14 Dec 2014 10:43 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரைவில் மீண்டு வருவார் எனப் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் நடிகை செளகார் ஜானகியின் 83-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, கொடுக்கப்பட்ட தண்டனை மிக அதிகம். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அபராதம் மட்டும் விதித்திருக்கலாம். வருமான வரி தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, அவர் தற்போது அபராதம் செலுத்தி விட்டதாக செய்திகள் வந்துள்ளன. எனவே அவர் தண்டனையில் இருந்து விரைவில் வெளியே வருவார். தமிழகத்தில் அவர் மிகச்சிறந்த நிர்வாகியாக இருந்தார்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமை களைக் குறைக்க வலிமையான சட்டங் களும், தண்டனைகளும் தேவை. பெண் களுக்கான ஆடைக்கட்டுப்பாடு குறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. ஆடை என்பது அவரவர் உரிமை. ஒரு பெண்ணின் ஆடை கட்டுப்பாட்டில் பெற்றோரைத் தவிர யாரும் தலையிட முடியாது என்றார்.
இவரது பிறந்த நாள் விழாவில், ஆசிரமத்தின் நிர்வாகி சுவாமி சுனில்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT