Published : 16 Dec 2014 03:26 PM
Last Updated : 16 Dec 2014 03:26 PM

ராணுவ பள்ளியை குறிவைத்தது ஏன்?- பாகிஸ்தான் தாலிபான் விளக்கம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு காரணம் கற்பித்துள்ளது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு.

"வடக்கு வாசாரிஸ்தானில் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்திருக்கிறோம்.

வேதனையை ராணுவத்தினர் உணரவே இதைச் செய்துள்ளோம்" என தீவிரவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விரிவான செய்தி ->பாகிஸ்தான் பள்ளியில் தாலிபான் தாக்குதல்: 84 குழந்தைகள் உட்பட 104 பேர் சுட்டுக்கொலை; 500 பேர் சிறைபிடிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x