Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM
தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் நடைபெற்ற கடல் தாமரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார். மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட தமிழக நிர்வாகிகள் உடன் வந்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
பா.ஜ.க., தே.மு.தி.க. இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வரு கிறது. எங்கள் கட்சியின் மாநில குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மாநில குழு தெரிவிக்கும் கருத்தின் அடிப் படையில் பாரதிய ஜனதா தேசிய தலைமை இறுதி முடிவை தெரிவிக்கும்.
தமிழகத்தில் நரேந்திர மோடி அலை இல்லை என்பது உங்களுடைய (செய்தியாளர்கள்) கருத்து. எங்களுடைய எண்ணம் முற்றிலும் மாறுபட்டது. தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய அரசியல் திட்டம் என்ன என்பதை செய்தியாளர்களிடம் தெரிவிக்க முடியாது என்றார். பின்னர் கார் மூலம் அவர் ராமேஸ்வரம் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT