Published : 04 Dec 2014 10:05 AM
Last Updated : 04 Dec 2014 10:05 AM
12 மாணவர்களுக்கு டிசி கொடுக்கப்பட்டதை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாநில கல்லூரியில் பல்வேறு மோதல் சம்பவங்களில் ஈடுபட்ட தாக 12 மாணவர்களுக்கு டிசி கொடுக்கப்பட்டது. இதைக் கண்டித்தும், அந்த மாணவர் களை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியும் மாநில கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சிறிது நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள் பின்னர் தாங்களாகவே கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT